பொது மக்களுக்கு எச்சரிக்கை..! ஏரிகளில் இருந்து நீர் திறப்பு..!

Default Image

ஏரிகளில் நீர்வாத்து அதிகரிப்பால், செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் இருந்து தலா 100 கனஅடி நீர் திறப்பு. 

மாண்டஸ் புயல், சென்னைக்கு 270 கிலோ மீட்டர் தென் கிழக்கே தீவிரப் புயலாக வங்க கடலில் மாண்டஸ் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே மாமல்லபுரத்தில் மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புயல் காரணமாக பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், ஏரிகளில் நீர்வாத்து அதிகரிப்பால், செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் இருந்து தலா 100 கனஅடி நீர் திறந்துவிடப்பட உள்ள நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்