எச்சரிக்கை..!தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் – வானிலை ஆய்வு மையம்!

Warning ..! Red Alert for the next 2 days in Tamil Nadu - Meteorological Center!

தமிழகம்:காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நவம்பர் 10 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் அதிக கனமழை பெய்யும் என்பதால் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வங்க கடலில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி,தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நவம்பர் 10 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் கனமழை முதல் அதிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால்,தமிழகத்திற்கு அடுத்த 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.இதன்காரணமாக,வங்க கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.