வேலூர் மக்களவை தொகுதியில் நடைபெற்ற வாக்கப்பதிவு நிறைவடைந்தது

Default Image

வேலூர் மக்களவை தொகுதியில் வாக்கப்பதிவு நிறைவு பெற்றுள்ளது.

வேலூர் தொகுதியில் பண பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது .பின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதில்,வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5- ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறும் என்று தெரிவித்தது.

வேலூர் தேர்தலில் அதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.திமுக சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.நாம் தமிழர் கட்சி சார்பில் தீப லட்சுமி போட்டியிடுகிறார்.நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் பரப்புரை ஓய்ந்தது.வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக ,திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியின் முக்கிய தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.இன்று பிரச்சாரம் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.மக்கள் அனைவரும் மிகவும் ஆர்வமுடன் வாக்கு அளித்தார்கள். இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு சரியாக மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.

வேலூர் மக்களவைத் தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 62.94% வாக்குப்பதிவாகியுள்ளது. 

வேலூர் – 58.55% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது. 

அணைக்கட்டு – 67.61% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது. 

கே.வி.குப்பம் – 67.01% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது. 

குடியாத்தம் – 67.25% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது. 

வாணியம்பாடி – 52% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது. 

ஆம்பூர் – 62.94% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்