தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் 156 ஊராட்சி ஒன்றியங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த தேர்தலில் கிராம ஊராட்சித்தலைவர், ஊராட்சி உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் என நான்கு பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. சில இடங்களில் சலசலப்பு ஏற்பட்டது. இருப்பினும் ஒரு வழியாக தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் பெரியமுள்ளிபட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு முடிந்த பிறகு, வாக்குசாவடியின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து வாக்கு பெட்டியை சிலர் தூக்கி சென்றனர். தடுக்க முயன்ற காவலர்களை தள்ளிவிட்டு தூக்கி சென்றனர்.
இந்த சம்பவம் மிகவும் அப்பகுதியை பரபரப்பாக்கியது. பின்னர் போலீசாரின் தீவிர விசாரணையில் திருடி கொண்டு செல்லப்பட்ட வாக்கு பெட்டியை சீல் உடைப்பதற்கு முன்னர் பத்திரமாக மீட்டனர். திருடி சென்ற இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். தற்போது கைது செய்யப்பட்ட இருவரிடமும் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…