மாங்காடு நகராட்சியில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து லட்சுமிபதி என்பவர் உயிரிழந்த சம்பவம் வேதனையளிக்கிறது. – சசிகலா கருத்து.
சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக மழைநீர் ஆங்காகே தேங்கி வருகிறது. இந்த மழைநீரை வெளியேற்ற மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அங்கங்கே மழைநீர் வடிகாலுக்காக பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாங்காடு பாலண்டிஸ்வர் தெருவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான 42வயதான லட்சுமிபதி என்பவர் இன்று அதிகாலை தனது வீட்டிலிருந்து வெளியே செல்கையில், அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார்.
இந்த சம்பவத்திற்கு பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் சசிகலா தனது கண்டனத்தை பதிவு செய்து வருகிறார். மாங்காடு நகராட்சியில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து லட்சுமிபதி என்பவர் உயிரிழந்த சம்பவம் வேதனையளிக்கிறது.’ என குறிப்பிட்டுளளார்.
மேலும், ‘ திமுக அரசு ஒவ்வொரு நாளும் இவ்வாறு உயிர்களை பலிகொடுத்து வேடிக்கை பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்? இந்த ஆட்சியாளர்கள் தங்களது அலட்சியப் போக்கை உடனே கைவிட்டு, அப்பாவி உயிர்கள் தொடர்ந்து பலியாவதை தடுத்து நிறுத்த வழிவகை செய்ய வேண்டும்.’ என தனது கண்டனத்தை சசிகலா பதிவிட்டுள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…