நீலகிரிக்கு வருவோர் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என அமைச்சர் கா.ராமச்சந்திரன் அறிவிப்பு.
கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து நீலகிரிக்கு வருவோர் கட்டாயம் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்திற்குள்ளான கொரோனா நெகடிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று நீலகிரில் செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக அண்டை மாநிலமான கேரளா, கர்நாடக, ஆந்திரா போன்ற மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கிய நிலையில், அங்கிருந்துதமிழகம் வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இதனால் விமான நிலையம் உள்ளிட்ட தமிழக எல்லை பகுதிகளில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்ட்டுள்ளது. இந்த நிலையில், நீலகிரிக்கு வருவோர் கட்டாயம் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டும் அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…