தமிழ் இலக்கிய ஆளுமைகளை கௌரவிக்கும் விஷ்ணுபுரம் விருது : நாவல் ஆசிரியர் ராஜ்கௌதமனுக்கு வழங்கப்பட்டது…!!

Default Image

2018 ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது தமிழ் இலக்கிய ஆய்வாளரும், நாவல் ஆசிரியருமான, பேராசிரியர் ராஜ்கௌதமனுக்கு அளிக்கப்பட்டது.
தமிழ் இலக்கிய ஆளுமைகளை கௌரவிக்கும் பொருட்டு விஷ்ணுபுரம் விருது கடந்த 2010ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. கோவையை மையமாகக் கொண்டு செயல்படும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
கோவையில் தனியார் மண்டபத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்ற இலக்கிய அமர்வில் இயக்குனர் வினோத் இயக்கிய பாட்டும் தொகையும் ஆவணப்படம் திரையிடப்பட்டது. இந்த ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது தமிழ் இலக்கிய ஆய்வாளரும் நாவல் ஆசிரியருமான பேராசிரியர் ராஜ்கௌதமன் அவர்களுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் அனிதா அக்னிகோத்ரி, எழுத்தாளர்கள் ஜெயமோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்