விருதுநகர் பாலியல் வழக்கு: 8 பேரில் 4 பேர் வேறு சிறைக்கு மாற்றம்..!

Default Image

விருதுநகர் கூட்டு பாலியல் வழக்கில் கைதான 8 பேரில் 4 பேர் மதுரை மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

விருதுநகரில் தனியார் ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பெண்ணை ஹரிஹரன் என்பவர் காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணுடன் தனிமையில் இருந்ததை வீடியோவாக ஹரிஹரன் எடுத்து மிரட்டி வந்துள்ளார். ஹரிஹரன் அந்த வீடியோவை தனது நண்பர்களுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.

அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவதாக கூறி அவரது நண்பர்கள் அப்பெண்ணை பலமுறை வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர், ஹரிஹரன் உட்பட 8 பேரை போலீஸார் கைது செய்தனர். இதைதொடர்ந்து, விருதுநகர் பட்டியலின பெண் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விருதுநகர் கூட்டு பாலியல் வழக்கில் கைதான 8 பேரில் ஹரிஹரன், மாடசாமி உள்பட 4 பேரை ஶ்ரீவில்லிபுத்தூர் கிளைச்சிறையில் இருந்து மதுரை மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Polling - snow
music director sam cs
seeman udhayanidhi stalin
Dimuth Karunaratne
Cristiano Ronaldo and Lionel Messi
UP Train Accident
anganwadi kerala shanku