விருதுநகர் வெடிவிபத்து – FIRஇல் வெளியான திடுக்கிடும் தகவல்கள்.!

Published by
கெளதம்

Virudhunagar : வெடிமருந்து வேன்களை அருகருகே வைத்து, வெடிமருந்துகளை இறக்கியதே விபத்துக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் பகுதியில் செயல்பட்டு வந்த கல்குவாரியில் நேற்று (மே 1) நடந்த வெடிவிபத்தில், குருசாமி, கந்தசாமி, துரை ஆகிய 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் இந்த வெடி விபத்தில் காயமடைந்தனர். பயங்கர சத்தத்துடன் ஏற்பட்ட விபத்தின் காரணமாக அருகில் உள்ள சில வீடுகளில் விரிசல் ஏற்பட்டது.

இந்த சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த பயங்கர வெடி விபத்து தொடர்பாக இதுவரை, சேது ராஜ்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ராம்ஜி, ராமமூர்த்தி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த வெடிவிபத்து தொடர்பாக, அப்பகுதி கிராம நிர்வாக அதிகாரி செல்வராஜ் அளித்த புகாரின் பெயரில், FIR பதியப்பட்டது. விருதுநகர் காவல்துறையினர் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில், பல்வேறு அதிர்சசி தகவல்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதாவது, டெட்டனேட்டர் எனும் வெடிமருந்து இருந்த வேன் மற்றும் நைட்ரஜன் இருந்த வேன் என இரு வெடிமருந்து இருந்த வாகனங்களும் அருகருகே வைத்து, அதில் இருந்து வெடிபொருட்களை தொழிலாளர்கள் இறக்கிய போது இந்த கோர விபத்து நேர்ந்ததாக FIRஇல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி வெடிமருந்துகளை இறக்கியுள்ளனர் என்றும், உயிருக்கு ஆபத்து ஏற்படும் என தெரிந்தும் பாதுகாப்பற்ற முறையில் வெடிமருந்துகளைக் கையாண்டதும் விசாரணையில் தெரிய வந்துளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வெடி விபத்து தொடர்பாக மனித உயிருக்கு ஆபத்து விளைவித்தல் , பாதுகாப்பற்ற முறையில் ஆபத்தான பொருட்களை கையாளுதல், பாதுகாப்பு குறைபாடு உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

வெடிவிபத்தில் சிதறிய உடல்களை சுமார் 2 மணிநேரமாக மீட்புப்படையினர் தேடி பின்னர், அதனை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்த பிறகு இன்று அதிகாலை உறவினர்களிடம் உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன. அப்போது, உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

அம்பேத்கரை இழிவுபடுத்திய கட்சி காங்கிரஸ்! மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில்  அம்பேத்கர்  பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…

25 minutes ago

நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…

47 minutes ago

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

10 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

12 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

13 hours ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

13 hours ago