திருச்சி, மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.40க்கு அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான் 2 வயது சிறுவன் சுஜித். அவனை மீட்க நான்கு நாட்களாக மீட்பு குழுவினர் போராடினர்.
சுஜீத்தை உயிருடன் மீட்கும் முயற்சிகள் தோல்வியில் முடியவே நேற்று இரவு சிறுவன் இறந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் பின்னர், இன்று காலை சிறுவனின் உடல் மீட்கப்பட்டது.
சிறுவனின் உடலுக்கு பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இணையதளத்தில் அனைவரும் தங்கள் இரங்கலை வருத்தத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சுஜித் நடனமாடும் வீடியோ என ஒரு வீடியோ இணையதளத்தில் பகிரப்பட்டு வருகிறது. உண்மை ஆராய்ந்ததில் அச்சிறுவன் சுஜீத் இல்லை எனவும், அச்சிறுவன் வேறு ஒருவன் எனவும், தவறாக பகிரப்பட்டு வருகிறது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அச்சிறுவன் பற்றிய உண்மை நிலவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.
சென்னை : இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று முதலே பிறந்தநாள் கொண்டாட்ட…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையேயான வெள்ளை மாளிகையில் நடந்த…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் நேற்று, ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி மழை காரணமாக…
மும்பை : மாதந்தோறும் 1ம் தேதி எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், இன்று சென்னையில் வணிக…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…