வைரல் வீடியோ :ஊராட்சி மன்றத்தில் “தமிழ் தாய் வாழ்த்து பாடலை”தவறாக ஊராட்சி மன்ற உறுப்பினர் .!

Published by
murugan
  • கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை ஊராட்சி  மன்றத்தில் இன்று  பதவியேற்பு விழா நடைபெற்றது
  • அவர் பாடிய தமிழ்தாய் வாழ்த்து பாடலில் “சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்” என பாடுவதற்கு பதிலாக  “சீராலும் கடலமென திகபறந்த கண்ட நபில்” என பாடி உள்ளார்.

தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு மட்டும் இரண்டு கட்டங்களாக  உள்ளாட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர் ,  மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் ஆகிய பதவிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ம் தேதி தொடங்கி அடுத்த மறுநாள் மாலை வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இந்த உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிகளுக்கு திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. பின்னர் இறுதியாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அதிமுக கூட்டணி விட திமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியது.

தமிழகத்தில் நடைபெற்ற  உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற உள்ளாட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு பதவியேற்பு விழா தற்போது அந்தந்த மாவட்டங்களில் நடைபெற்றது வருகிறது.

இந்நிலையில்  கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை ஊராட்சி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற  வார்டு உறுப்பினர் மற்றும் ஊராட்சி தலைவர் ஆகியோருக்கான பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. விழாவின் தொடக்கத்தின் போது தமிழ் தாய் வாழ்த்து பாடல் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட அனைவரும் பாடினர்.

அப்போது முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஞானவேல்என்பவர்  தமிழ்தாய் வாழ்த்து பாடலை தவறாக மைக்கில் பாடினார்.இதனால் அங்கு இருந்தவர்கள் உடனடியாக பாடலை நிறுத்துமாறு அவரிடம் கூறினர்.அவர் தமிழ்தாய் வாழ்த்து பாடலை தவறாக பாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அவர் பாடிய தமிழ்தாய் வாழ்த்து பாடலில் “சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்” என பாடுவதற்கு பதிலாக  “சீராலும் கடலமென திகபறந்த கண்ட நபில்” என பாடி உள்ளார்.

 

 

Published by
murugan

Recent Posts

INDvENG : முதல் ஒரு நாள் போட்டியில் களமிறங்கவுள்ள இந்திய வீரர்கள்!

INDvENG : முதல் ஒரு நாள் போட்டியில் களமிறங்கவுள்ள இந்திய வீரர்கள்!

மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…

7 hours ago

பெரியார் குறித்து சீமான் பேச்சு! கலவரம் வேண்டாம் என அமைதியாக இருக்கிறோம் – வைகோ

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார்.  இதன் காரணமாக…

8 hours ago

ரசிகர்களுக்கு மீண்டும் சர்ப்ரைஸ்! STR51 படத்தின் வெறித்தனமான அப்டேட்!

சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…

8 hours ago

சாம்பியன்ஸ் டிராபி 2025 : டிக்கெட் வாங்கிவிட்டீர்களா? ஐசிசி கொடுத்த முக்கிய அப்டேட்!

துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…

9 hours ago

பிப் 5 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்! ஓய்ந்தது பரப்புரை!

ஈரோடு :  கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…

9 hours ago

இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு இல்லை., தொடர் தாக்குதல்., கனிமொழி கடும் விமர்சனம்!

டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…

9 hours ago