விநாயக சதுர்த்தியை முன்னிட்டு அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க சென்னை மற்றும் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விநாயக சதுர்த்தி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது . இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் இந்த விநாயகர் சதுர்த்தியில் விநாயகர் சிலைகளை வைக்கவும் , ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், சிலைகளை கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒரு சில இந்து அமைப்புகள் அரசின் உத்தரவை மீறி சிலைகளை வைக்க போவதாகவும், ஊர்வலம் நடத்த போவதாகவும் கூறியதை அடுத்து சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதனால் அரசு உத்தரவை மீறி சிலைகளை வைத்து வழிபாடு செய்யும் அமைப்பின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சிலைகளை அகற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 5 இடங்களில் வழக்கமாக விநாயகர் சிலைகள் கரைக்கப்படும். எனவே அந்த பகுதிகளில் காவல்துறையினர் கூடுதல் கண்காணிப்பில் ஈடுபட்டதுடன், சென்னையில் உள்ள பல பகுதிகளில் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க 15 ஆயிரம் காவலர்கள் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் துணை கண்காணிப்பாளர் கோகுல கிருஷ்ணன் தலைமையில் தென்காசி மற்றும் செங்கோட்டை பகுதிகளில் போலீசார் அணி வகுப்பு நடத்தினர் .
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…