விழுப்புரம் திமுக மத்திய மாவட்ட செயலாளராக நா.புகழேந்தி நியமனம் செய்யப்படுவதாக துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அண்மையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தி.மு.க பொதுச் செயலாளராக துரைமுருகன் மற்றும் தி.மு.க பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். திமுகவில் துணை பொதுச்செயலாளராக ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் உள்ள நிலையில் ,திமுக துணைப் பொதுச்செயலாளர்களாக பொன்முடியும், ஆ.ராசாவும் நியமனம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் விழுப்புரம் மத்திய மாவட்டச்செயலாளர் பொறுப்பிற்கு புகழேந்தி தேர்வு செய்யப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.துணைப்பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட பொன்முடி வகித்த விழுப்புரம் மத்திய மாவட்டச்செயலாளர் பதவி தற்போது புகழேந்திக்கு வழங்கப்பட்டுள்ளது.மேலும் திமுக கட்சி விதிகள்படி ஒருவருக்கு ஒரு பொறுப்பு என்றும் கூறப்படுகிறது.அன்பழகன் மறைவிற்கு பின் , திமுக தலைவர் பெயரில் வந்த அறிவிப்புகள், தற்போது பொதுச்செயலாளர் பெயரில் அறிவிப்பு வந்துள்ளது.
சென்னை : ஹாலிவுட்டில் தி பிரைம் ஆப் மிஸ் ஜீன் பிராடி', 'ஹாரி பாட்டர்', உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம்…
மும்பை : இந்திய அணியில் இடம்பெற்று விளையாடி வரும் சர்பராஸ் கான் சகோதரரும், மகாராஷ்டிரவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரருமான…
சென்னை : லப்பர் பந்து திரைப்படம் வசூலில் பனைமர உயரத்துக்கு சிக்ஸர் விளாசி வருவதுபோல, விமர்சன ரீதியாகவும் பல பிரபலங்களிடம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அளிக்கப்படும் பிரசாதமான லட்டு குறித்த சர்ச்சை நாடு எங்கிலும் பேசும் பொருளாகவே அமைந்துள்ளது.…
சென்னை : கடந்த இரு தினங்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பொழிந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, சென்னையின் புறநகர்ப்…
சென்னை : நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த் சுவாமி நடித்த 'மெய்யழகன்' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி, திரை விமர்சகர்கள்…