விழுப்புரம் திமுக மத்திய மாவட்ட செயலாளராக நா.புகழேந்தி நியமனம் செய்யப்படுவதாக துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அண்மையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தி.மு.க பொதுச் செயலாளராக துரைமுருகன் மற்றும் தி.மு.க பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். திமுகவில் துணை பொதுச்செயலாளராக ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் உள்ள நிலையில் ,திமுக துணைப் பொதுச்செயலாளர்களாக பொன்முடியும், ஆ.ராசாவும் நியமனம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் விழுப்புரம் மத்திய மாவட்டச்செயலாளர் பொறுப்பிற்கு புகழேந்தி தேர்வு செய்யப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.துணைப்பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட பொன்முடி வகித்த விழுப்புரம் மத்திய மாவட்டச்செயலாளர் பதவி தற்போது புகழேந்திக்கு வழங்கப்பட்டுள்ளது.மேலும் திமுக கட்சி விதிகள்படி ஒருவருக்கு ஒரு பொறுப்பு என்றும் கூறப்படுகிறது.அன்பழகன் மறைவிற்கு பின் , திமுக தலைவர் பெயரில் வந்த அறிவிப்புகள், தற்போது பொதுச்செயலாளர் பெயரில் அறிவிப்பு வந்துள்ளது.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…