விழுப்புரம் திமுக மத்திய மாவட்ட செயலாளராக புகழேந்தி நியமனம் – துரைமுருகன் அறிவிப்பு

Default Image

விழுப்புரம் திமுக மத்திய மாவட்ட செயலாளராக நா.புகழேந்தி நியமனம் செய்யப்படுவதாக  துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அண்மையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தி.மு.க பொதுச் செயலாளராக துரைமுருகன் மற்றும் தி.மு.க பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். திமுகவில் துணை பொதுச்செயலாளராக ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் உள்ள நிலையில் ,திமுக துணைப் பொதுச்செயலாளர்களாக பொன்முடியும், ஆ.ராசாவும் நியமனம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் விழுப்புரம் மத்திய மாவட்டச்செயலாளர் பொறுப்பிற்கு புகழேந்தி தேர்வு செய்யப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.துணைப்பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட பொன்முடி வகித்த விழுப்புரம் மத்திய மாவட்டச்செயலாளர் பதவி தற்போது புகழேந்திக்கு வழங்கப்பட்டுள்ளது.மேலும் திமுக  கட்சி விதிகள்படி ஒருவருக்கு ஒரு பொறுப்பு என்றும் கூறப்படுகிறது.அன்பழகன் மறைவிற்கு பின் , திமுக தலைவர் பெயரில் வந்த அறிவிப்புகள், தற்போது பொதுச்செயலாளர் பெயரில் அறிவிப்பு வந்துள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்