[Image used for representative purpose only]
கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.க்கள் பணியிடை நீக்கம்.
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து தற்போது வரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கள்ளச்சாராயம் மரணம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 20 மேற்பட்டோர் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
இதன்பின் பேசிய அவர், முதற்கட்ட விசாரணையில் கள்ளச்சாராயத்தில் மெத்தனால் பயன்படுத்தியதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மரக்காணம் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்படுவர். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும் என்றார்.
இந்த நிலையில், கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.க்கள் பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, கள்ளச்சாராயம் விவகாரத்தில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா மற்றும் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்கு பிரிவு துணை கண்காணிப்பாளர்களையும் பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
சென்னை : திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அண்மையில் தனது தொகுதியான காட்பாடியில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள்…
சென்னை : திமுக அமைச்சர் பொன்முடி அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசுகையில், உடலுறவு குறித்து மறைமுகமாக இரு சமூகத்தை…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருந்திருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழிசை சௌந்தரராஜன் வீட்டிற்கு நேரில் சென்று…
சென்னை : அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, விலைமாது பெண் பற்றி கதை கூறினார்.…
பெங்களூரு : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில்…
சென்னை : தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அவர் பேசிய பேச்சுக்கள்…