ஊராட்சி மன்ற தலைவர் பதவியேற்க கிராமமக்கள் கடும் எதிர்ப்பு.!

Published by
murugan
  • பின்னர் வாக்கு எண்ணிக்கையான கடந்த 2-ம்தேதி  ஜெயலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து அடுத்த மறுநாள் விஜயலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
  • விஜயலட்சுமியை ஊராட்சி மன்ற தலைவராக பதவி ஏற்பதை ரத்து செய்ய வேண்டும்.

கடலூர் ஒன்றியம் குமளங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஆட்டோ சின்னத்தில் ஜெயலட்சுமி  என்பவரும் , பூட்டு சாவி சின்னத்தில் விஜயலட்சுமி என்பவரும் போட்டியிட்டனர். பின்னர் வாக்கு எண்ணிக்கையான கடந்த 2-ம்தேதி  ஜெயலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அடுத்த மறுநாள் விஜயலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.  இதனால் ஜெயலட்சுமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆனாலும் விஜயலட்சுமி வெற்றி பெற்றதாக அதிகாரிகள் சான்றிதழ் வழங்கினர்.

இந்நிலையில் ஜெயலட்சுமியின் ஆதரவாளர்கள் மற்றும் கிராம மக்கள் நேற்று குமளங்குளத்தில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெயரில் ஏற்பட்ட குளறுபடியால் விஜயலட்சுமிக்கு வழங்கப்பட்ட வெற்றி சான்றிதழை ரத்து செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் பதவிக்கான பதவியேற்பு விழாவை ரத்து செய்ய வேண்டும் என கோஷமிட்டார்கள். இதையெடுத்து நேற்று காலை 10 மணிக்கு நடைபெற இருந்த பதிவியேற்பு விழாவில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

அப்போது ஜெயலட்சுமியின் ஆதரவாளர்கள் திரண்டு வந்து பதவி ஏற்பு விழா நடத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இங்கு இருந்து கலைந்து செல்லுங்கள் என போலீசார் கூறினர்.ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர்.

விஜயலட்சுமியை ஊராட்சி மன்ற தலைவராக பதவி ஏற்பதை ரத்து செய்ய வேண்டும். இல்லையேன்றால் எங்களது வாக்காளர் அடையாள அட்டை , ரே‌ஷன் கார்டு மற்றும் அரசு ஆவணங்கள் அனைத்தையும் உங்களிடம் ஒப்படைத்து விடுவோம் என கூறினர்.

 

Published by
murugan

Recent Posts

ENGvsAUS : “போட்டியின் குறுக்கே வந்த கனமழை”! தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலிய அணி அசத்தல்!

ENGvsAUS : “போட்டியின் குறுக்கே வந்த கனமழை”! தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலிய அணி அசத்தல்!

பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…

7 hours ago

துணை முதல்வர் உதயநிதியின் முதல் நாள்.! பெரியார் திடல் முதல்., கலைஞர் இல்லம் வரை..,

சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…

13 hours ago

செந்தில் பாலாஜி எனும் நான்.., ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவி பிரமாணம்.!

சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…

14 hours ago

ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…

19 hours ago

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

1 day ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

1 day ago