ரத்தாகிறது கிராமசபை கூட்டம்..அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Default Image

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை. இதனிடையே  மகாத்மா காந்தி பிறந்த நாளான  இன்று கிராமசபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது.

 இந்நிலையில் மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தமிழகமெங்கும் இன்று நடைபெற உள்ள கிராம சபை கூட்டங்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை உள்ளாட்சித்துறை வெளியிட்டது. இதன்படி காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டங்களை நடத்தவேண்டும் என்று அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.கிராம சபை பாதுகாப்பான பொது வெளியிலோ அல்லது நல்ல காற்றோட்டமான கட்டிடத்திற்குள்ளாகவோ நடத்த வேண்டும் என்று கூறப்பட்டது.

மேலும் இக்கூட்டத்தில் பங்கேற்பவர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிவதுடன் 6 அடி இடைபெளி விட்டு அமர வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை கட்டாயம் என்று தெரிவித்திருந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கிராமசபை கூட்டம்  ரத்து செய்யப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.


	

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்