கிராம வளர்ச்சிக்கு தான் கிராம சபை, எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதற்கு அல்ல என தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
தமிழக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜிகே வாசன் அவர்கள் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படாமல் இருப்பது மக்கள் நலனுக்காக தான் எனவும், ஆனால் எதிர்க்கட்சிகள் தங்கள் அரசியல் லாபத்திற்காக இந்த கிராம சபை கூட்டங்களை நடத்தி மக்களை அரசுக்கு எதிராகத் திருப்பிவிட இதை ஒரு களமாக பயன்படுத்துகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தான் பல்வேறு தொடர் முயற்சிகளை எடுத்து வருவதாகவும் இதனால் சில இடங்களில் முன்னேற்றமும் சில இடங்களில் எதிர்பார்ப்புக்கு அதிகமாக கொரானா தொற்றும் ஏற்பட்டு இருக்கிறது.
சில மாதங்களுக்கு இந்த கொரோனா தொற்று தொடர வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறியிருப்பதால், தமிழக அரசால் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்களுடைய பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் உயர்வதற்கான வழிகளாக தான் பேருந்துகள், ரயில்கள், கடைகள் ஆகியவை திறக்கவும் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் தளர்வுகளை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. இருப்பினும் மக்கள் அலட்சியமாக இருப்பதால் தொற்று மேலும் பரவிக்கொண்டிருக்கிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த கூடிய வகையில் அரசு செயல்பட வேண்டும் என்பதால்தான் கிராமசபை கூட்டங்கள் நடத்த கூடாது என ரத்து செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் எதிர்க்கட்சிகள் தங்கள் அரசியல் லாபத்திற்காக அரசுக்கு எதிராக மக்களைத் திருப்பி விடுவதற்காக இந்த கிராமசபை கூட்டங்களை ஊரடங்கு நேரத்தில் நடத்தி அதை அரசுக்கு எதிராக மக்களைத் திருப்பி விடுவதற்கான ஒரு களமாக பயன்படுத்துகிறது. அரசியல் கட்சிகளின் விருப்பத்துக்கு ஏற்ப கிராமசபை கூட்டங்கள் நடத்த வேண்டும் என்பது கிராம வளர்ச்சிக்கு உதவாது. இதனால் கிராமங்களில் கொரோனா பரவுவதற்கான சூழ்நிலையை மேலும் அதிகப்படுத்திவிடும். கிராமசபை கூட்டம் நடத்துவது முக்கியம் என்றாலும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு அதை தடை செய்திருக்கும் பொழுது எதிர்க் கட்சிகளும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு சட்ட ஒழுங்கைக் கடைப்பிடித்து நடப்பதுதான் மக்களும் ஏற்றுக் கொள்வார்கள். இதைதான் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சி வலியுறுத்துகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…