தடையை மீறி நடத்தப்பட்ட கிராமசபை நடத்தியதால், திமுக எம்.பி கனிமொழி உட்பட 300 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அக்டோபர் இரண்டாம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் நடக்க இருந்த கிராமசபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டது. எந்த இடங்களிலும் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படாவிட்டாலும், திமுக சார்பில் அனைத்து ஊராட்சி மக்களையும் சந்தித்து வேளாண் சட்டம் குறித்து எடுத்துரைக்கும் வகையில் கிராம சபை கூட்டம் அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் கனிமொழி மற்றும் அமைச்சர்களுடன் நடத்தப்பட்டது.
இந்நிலையில் தடையை மீறி திமுக சார்பில் கிராம சபை கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளையில் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் திருச்செந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரால் நடத்தப்பட்டுள்ளது. இதனால், தடையை மீறி கிராமசபை கூட்டம் நடத்திய கனிமொழி மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 300 பேர் மீது தட்டார்மடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாக்பூர் : மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வன்முறை வெடித்துள்ள நிலையில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. நாக்பூரில் அவுரங்கசீப்…
சென்னை : கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர்.…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
கலிபோர்னியா : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்கலம்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
சென்னை : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை…