பிளக்ஸ் பேனரில் கிராமத்தின் வரவு செலவு கணக்கு – தமிழக அரசு உத்தரவு

Published by
லீனா

பிளக்ஸ் பேனரில் கிராமத்தின் வரவு செலவு கணக்கு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தொழிலாளர் தினமான மே-1 ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், பிளக்ஸ் பேனரில் கிராமத்தின் வரவு செலவு கணக்கு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த 2021-22 ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து திட்டங்களுக்கான செலவு அறிக்கை, மேலும் அனைத்து திட்டங்களின் கீழ் பயனடைந்த வரவு பயனாளிகளின் விவரம் மற்றும் பணிகளின் முன்னேற்ற விவரங்கள் அடங்கிய முழு அறிக்கை கிராம சபை நடப்பதற்கு முன்னதாக 29.04.2022 மற்றும் 30.04.2022 ஆகிய நாட்களில் ஒவ்வொரு கிராம ஊராட்சியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலக தகவல் பலகையில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படுவது உறுதி செய்ய வேண்டும்.

இந்த தகவலினை ப்ளக்ஸ் பேனேர்கள் மூலமும் பொதுமக்கள் பார்த்து அறியும் வண்ணம் பொருத்திட வேண்டும். மேலும், 2022-23-ம் ஆண்டிற்கு தேர்வு செய்யப்பட்ட பணிகளின் விவரம் மற்றும் பயனாளிகள் விவரம் அனைத்தும் கிராமசபையில் பொதுமக்கள் முன்னிலையில் படித்துக் காண்பித்து ஒப்புதல் பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும்.

மேலும் கிராம ஊராட்சியில் 2021-22 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து வரவு செலவு விவரங்கள் அடங்கிய சுருக்கத்தினை கிராம சபையில் பங்கேற்கும் பொது மக்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

7 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

15 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago