விக்கிரவாண்டி தேர்தல் : விக்கிரவாண்டியில் நடைபெற்று பெரும் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில்வெற்றி கணிப்பு அதிகம் இருப்பதால் முதல்வர் முகஸ்டாலின் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகிறார்.
கடந்த ஜூலை-10ம் தேதி (புதன்கிழமை) அன்று விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலானது நடைபெற்றது. இதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா வேட்பாளர்களாக போட்டியிட்டனர். நடைபெற்று முடிந்த இந்த தேர்தலின் வாக்கு எணிக்கையானது இன்று காலை (ஜூலை-13) 8 மணி அளவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும், தற்போது 10 சுற்றுகள் நிறைவடைந்த இந்த வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பளரான அன்னியூர் சிவா அதிக அளவு வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார். 10-வது சுற்று வாக்கு எணிக்கை முடிவில் அவர் 63,205 வாக்குகள் பெற்று 35,360 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் சி.அன்புமணி 27,845 வாக்குகளும், நாதக வேட்பாளரான அபிநயா 5,265 வாக்குகளும் பெற்று தொடர் பின்னடைவை சந்தித்த வருகின்றனர். இந்நிலையில், திமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் முன்னிலை பெற்று வருவதால் வெற்றி பெரும் வாய்ப்பும் அதிகரித்து உள்ளது.
இதன் காரணமாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அங்கு கூடி இருந்த தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி வருகிறார். அங்கு கூடி இருந்த தொண்டர்களும் இடை தேர்தலில் வெற்றி பெரும் வாய்ப்பு அதிகரித்துள்ளதால் உற்சாகத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…