விக்கிரவாண்டி தேர்தல் : இனிப்பு கொடுத்து கொண்டாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

Published by
அகில் R

விக்கிரவாண்டி தேர்தல் : விக்கிரவாண்டியில் நடைபெற்று பெரும் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில்வெற்றி கணிப்பு அதிகம் இருப்பதால் முதல்வர் முகஸ்டாலின் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகிறார்.

கடந்த ஜூலை-10ம் தேதி (புதன்கிழமை) அன்று விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலானது நடைபெற்றது. இதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா வேட்பாளர்களாக போட்டியிட்டனர். நடைபெற்று முடிந்த இந்த தேர்தலின் வாக்கு எணிக்கையானது இன்று காலை (ஜூலை-13) 8 மணி அளவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும், தற்போது 10 சுற்றுகள் நிறைவடைந்த இந்த வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பளரான அன்னியூர் சிவா அதிக அளவு வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார். 10-வது சுற்று வாக்கு எணிக்கை முடிவில் அவர் 63,205 வாக்குகள் பெற்று 35,360 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் சி.அன்புமணி 27,845 வாக்குகளும், நாதக வேட்பாளரான அபிநயா 5,265 வாக்குகளும் பெற்று தொடர் பின்னடைவை சந்தித்த வருகின்றனர். இந்நிலையில், திமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் முன்னிலை பெற்று வருவதால் வெற்றி பெரும் வாய்ப்பும் அதிகரித்து உள்ளது.

இதன் காரணமாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அங்கு கூடி இருந்த தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி வருகிறார். அங்கு கூடி இருந்த தொண்டர்களும் இடை தேர்தலில் வெற்றி பெரும் வாய்ப்பு அதிகரித்துள்ளதால் உற்சாகத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Recent Posts

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…

7 hours ago

“இதற்காகவே நாங்கள் பெரியாரை கொண்டாடுகிறோம்” நிர்மலா சீதாராமனுக்கு பதில் கொடுத்த விஜய்!

சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…

8 hours ago

இது எங்க காலம்.! ஐசிசி தரவரிசையில் எகிறி அடிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…

9 hours ago

30 பேர் சுட்டுக்கொலை! 190 பேர் மீட்பு! மற்றவர்கள் நிலை? பாக். ரயில் கடத்தல் அப்டேட்…

இஸ்லாமாபாத்  : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…

10 hours ago

யாருக்கு அறிவில்லை? அமைச்சர் பி.டி.ஆர் vs அண்ணாமலை வார்த்தை போர்!

சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…

11 hours ago

மார்ச் 22-ஐ குறிவைத்து காத்திருக்கும் திமுக! பல்வேறு மாநில ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு!

சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…

12 hours ago