கேப்டன் விஜயகாந்த் வராமலேயே அவரது மகன் திருமணத்திற்க்கான முக்கிய நிகழ்ச்சி முடிவடைந்தது!

Default Image
  • கேப்டன் விஜயகாந்தின் முதல்  மகன் விஜய பிரபாகரனுக்கும் கோவை தொழிலதிபர் மகளுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. 
  • கோவை பெரியநாயக்கம்பாளையத்தை சேர்ந்த இளங்கோ என்பவரது மகள் கீர்த்தனாவுக்கும் விஜய பிரபாகரனுக்கும் பூவைக்கும் வைபவம் நடைபெற்றது. 

தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் அவர்களின் மகன் விஜய பிரபாகரன் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இவருக்கு அண்மையில் கோயம்பத்தூர் பெரியநாயக்கம்பாளையத்தை சேர்ந்த தொழிலதிபர் இளங்கோ அவர்களின் மகன் கீர்தனாவிற்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டுள்ளது.

இந்த திருமண நிகழ்ச்சிகளின் ஒரு முக்கிய நிகழ்வான பூ வைத்து பெண்பார்க்கும் நிகழ்ச்சி கோவை, சிங்காநல்லூரில் உறவினர் வீட்டில் வைத்து நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கலந்துகொள்ள வில்லை. அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் முன்னின்று இந்த நிகழ்ச்சியை நடத்தினார். விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்