Vijayatharani has no seat in BJP [image source:PTI]
Vijayadharani: தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரஸில் இருந்து விலகிய விஜயதரணிக்கு பாஜகவிலும் சீட் மறுக்கப்பட்டுள்ளது. விளவங்கோடு தொகுதியில் எம்எல்ஏவாக மூன்று முறை பதவி வகித்து வந்த விஜயதரணி, காங்கிரஸ் கட்சியின் மீதான அதிருப்தி காரணமாக சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் டெல்லியில் முக்கிய தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்திருந்தார்.
காங்கிரஸில் சீட் பிரச்சனை காரணமாக பாஜகவில் இருந்ததாக கூறப்பட்டது. இதனால் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த விஜயதரணி தனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். இதனால், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், வரும் ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலுடன் சேர்த்து விளவங்கோடு தொகுதிக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த சூழலில் மக்களவை தேர்தலுக்கும், விளவங்கோடு தொகுதிக்குமான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டிருந்தது . அதில், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், பொன் ராதாகிருஷ்ணன், எல் முருகன், தமிழிசை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பெயர்கள் இடம்பெற்றிருந்தது. இதுபோன்று, விளவங்கோடு இடைத்தேர்தலில் பாஜக சார்பில் விளவங்கோடு இடைத்தேர்தலில் போட்டியிட நந்தினி என்பவரை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
முதலில் கன்னியாகுமரி தொகுதியில் விஜயதரணி பெயரும் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொன் ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஏனென்றால், கன்னியாகுமரி தொகுதியை விஜயதரணி கேட்டு வந்ததாக தகவல் வெளியானது. ஆனால், மறுக்கப்பட்ட நிலையில், சரி விளவங்கோடு வேட்பாளராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிலும் நந்தினி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் விஜயதரணி ஆதரவாளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…