விஜயகாந்த் இறுதி ஊர்வலம் தொடங்கியது..!

Published by
murugan

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் அஞ்சலிக்காக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டது.

பின்னர் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத் திடலில் இன்று காலை வைக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை தீவுத் திடலில் இருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு விஜயகாந்த் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது.

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் விஜயகாந்த் உடல் ஊர்வலமாககொண்டு செல்லப்படுகிறது. தீவுத் திடலில் இருந்து ஈவேரா பெரியார் சாலை வழியாக கோயம்பேடு நோக்கி விஜயகாந்த் இறுதி ஊர்வலம் செல்கிறது. தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் மாலை 4 .45 மணிக்கு அளவில் இறுதி சடங்கு நடைபெறுகிறது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பின்படி முழு அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல்  நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்படுகிறது.  விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்படும் சந்தன பேழையில்  “புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த்” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. அதேபோல விஜயகாந்த் பிறப்பு , இறப்பு தேதிகளும் இடம் பெற்றுள்ளன.

Recent Posts

வைரல் வீடியோ: பஹல்காம் தாக்குதலுக்கு ஜிப்லைன் ஆப்ரேட்டர் காரணமா? சுற்றுலா பயணி அளித்த ஆதாரம்.!

காஷ்மீர் : பஹல்காமில் 6 நாட்களுக்கு முன்பு நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது, எடுக்கப்பட்ட புதிய காணொளி ஒன்று  வெளியாகியுள்ளது.…

36 minutes ago

தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!

டெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய தினம் டெல்லியில்…

2 hours ago

“மக்களுக்காக பணியாற்ற மீண்டும் ஒரு வாய்ப்பு” -அமைச்சர் மனோ தங்கராஜ் நெகிழ்ச்சி!

சென்னை : நேற்று முன் தினம் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சர் பொறுப்பு…

2 hours ago

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

10 hours ago

கடுகு சிறுசு தான் காரம் பெருசு! சம்பவம் செய்த வைபவ் சூர்யவன்ஷி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…

11 hours ago

இந்தியா தாக்குதல் நடத்தலாம்…எங்கள் படைகளை வலுப்படுத்தியுள்ளோம்! – பாகிஸ்தான்!

பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

11 hours ago