போர்க்கால அடிப்படையில் கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக செலுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் வலியுறுத்தி உள்ளார்.
நாடு முழுவதிலும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அனைவரும் தடுப்புச் எடுத்துக்கொள்ள வேண்டும் என கூறப்பட்டாலும் தடுப்பூசிகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பலர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமலேயே இருக்கின்றனர். இந்நிலையில் இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் போர்கால அடிப்படையில் மத்திய அரசு தடுப்பூசிகளை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீபகாலமாக கொரோனா அதிகரித்து வரும் நிலையில் ஏற்கனவே சிகிச்சைக்கு பயன்படக்கூடிய ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வருவது தனக்கு வேதனை அளிப்பதாக கூறியுள்ளார். மேலும் கொரோனாவை கட்டுப்படுத்தக்கூடிய தடுப்பூசிக்கு தயாரிப்பு நிறுவனங்களே விலை நிர்ணயம் செய்வது ஏற்கத்தக்கது அல்ல எனவும், மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆக்சிஜன் மற்றும் தடுப்புசி பற்றாக்குறையைப் போக்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மத்திய மாநில அரசுகளுடன் ஒன்றிணைந்து மக்களும் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ள அவர், கொரோனா இல்லாத இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…