விஷயமே தெரியாமல் முந்திக்கொண்டு அறிக்கையை வெளியிட்ட விஜயகாந்த் !

Published by
Venu

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை  பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் உடல் நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று தமிழ்நாடு திரும்பி வந்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.அரசியலில் அவ்வப்போதுதான் தான் தனது முகத்தை வெளிக்காட்டி வருகிறார்.முக்கிய முடிவுகள் ,வாழ்த்து செய்திகள் அனைத்தும் அறிக்கை மூலமாக தெரிவித்து வருகிறார்.

 

இந்த நிலையில் நேற்று விஜயகாந்த் சார்பாக நதிநீர் இணைப்புக்கு ஒற்றைத் தீர்ப்பாயம் மசோதா நிறைவேற்றியதை வரவேற்று அறிக்கை ஓன்று வெளியிடப்பட்டது.அந்த அறிக்கையில்,  மத்திய,மாநில அரசுகள் அதிக கவனம் செலுத்தி மழைக்காலங்களில் வரும் பெருவெள்ளம் கடலில் கலப்பதை தடுத்து,மழைநீரை சேமித்தாலே தமிழகம் செழிக்கும். அதேபோல் அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீரை பகிர்ந்து அளிக்க கூடிய அளவு நதிகளை இணைத்து, நீர் நிலைகளை உயர்த்துவதற்கு நதிநீர் இணைப்பு மிக அவசியம் என்று   அறிக்கை வெளியிட்டிருந்தார்.

கடந்த ஜூலை 31 ஆம் தேதி மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டு தொடர்பான பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒரே தீர்ப்பாயம் அமைக்க முடிவு செய்யும் வகையில் மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது.

அதாவது  நதிநீர் ஆணையங்கள் மொத்தம் 9 உள்ளது . அனைத்து ஆணையங்களையும் ஒன்றிணைத்து ஒரே தீர்ப்பாயம்  அமைக்கும் நோக்கில் தான் இந்த மசோதாவில்  நிறைவேற்றம் செய்யப்பட்டது.

ஆனால் தவறுதலாக விஜயகாந்த் சார்பாக வெளியிட்ட அறிக்கையில் நதிநீர் இணைப்பு குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Venu

Recent Posts

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…

3 hours ago

என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…

5 hours ago

MIvsRCB : படிதார், கோலி அதிரடி! மும்பைக்கு இது தான் இலக்கு!

மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…

6 hours ago

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…

7 hours ago

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…

8 hours ago

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

8 hours ago