ADMK Ex Minister C Vijayabaskar [File Image]
Election2024 : அதிமுக வேட்பாளரை வெற்றிபெற செய்தால் கட்சி நிர்வாகிகளுக்கு பரிசு என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் கடந்த முறை போல அல்லாமல் இந்த முறை எப்படியாவது அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்று அதிமுக தலைவர்கள் தீவிரமாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருபக்கம் தீவிர பிரச்சாரம் செய்து வந்தாலும், மறுப்பக்கம், கட்சி நிர்வாகிகள் சோர்ந்து விட கூடாது என அதிரடி அறிவிப்புகளும் அதிமுக சார்பில் வெளியாகி உள்ளது.
அதிமுக சார்பில் திருச்சி மக்களவை தொகுதியில் P.கருப்பையா என்பவர் போட்டியிடுகிறார், இவரை ஆதரித்து திருச்சி தொகுதி அதிமுக நிர்வாகிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கட்சி நிர்வாகிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதாவது, திருச்சி மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையாவை வெற்றிபெற வைக்க வேண்டும். அப்போது அதிக வாக்குகள் பெற்று தரும் நகர செயலாளருக்கு இன்னோவா கார் பரிசாக வழங்கப்படும் என்றும், வட்ட செயலாளர்களுக்கு 5 பவுன் தங்க சங்கிலிபரிசாக வழங்கப்படும் எனவும் கட்சி நிர்வாகிகளிடம் கூறியதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…
சென்னை : 2026 தமிழக சட்டப்பேரவையை குறிவைத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. முதல் முறையாக…
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…