சென்னை, வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் வேலை பார்த்துவந்த மருத்துவர்கள், ஊழியர்கள் உட்பட 118 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரையில் மருத்துவமனையை செயல்படுத்த கூடாது என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதிலும், தலைநகர் சென்னை கொரோனா பாதிப்பில் மிகவும் மோசமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், சென்னை, வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் வேலை பார்த்துவந்த மருத்துவர்கள், ஊழியர்கள் உட்பட 118 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மேலும், அந்த மருத்துவமனையில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது 118 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், விஜயா மருத்துவமனையின் அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்தி, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரையில் மருத்துவமனை செயல்பட கூடாது என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவு விஜயா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் சரத்ரெட்டி, மற்றும் 52 வயதான ஊழியரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…