சென்னை : த.வெ.க. கட்சி சார்பில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், தொகுதி வாரியாக 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை கொளரவிக்கும் விதமாக கல்வி விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள திருவான்மியூரில் ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா தொடங்கியுள்ளது.
இந்த விருது வழங்கும் விழாவில் முதலில் ‘தலைவா தலைவா’ பாடல் ல் ஒளிக்கப்படு தவெக தலைவரான விஜய் ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டருக்குள் நுழைந்தார். மேலும், உள்ளே வந்தவுடன் முதலாவதாக நாங்குநேரியில் சாதி ஆதிக்கத்தால் கொடூரமாக பாதிக்கப்பட்ட சிறுவன் சின்னதுரை அருகில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
நாங்குநேரியில் கடந்த ஆண்டு நாங்குநேரியில் சாதி பாகுபாட்டால் தங்கையுடன் சேர்த்து 12ம் வகுப்பு மாணவரான சின்னத்துரையை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் அப்போது உலுக்கி இருந்தது. அதன்பிறகு அந்த மாணவர் இந்த ஆண்டு 12 வகுப்பு பொது தேர்வில் 469 மதிப்பெண்கள் எடுத்து அபார தேர்ச்சி பெற்றிருந்தார்.
தற்போது அரங்கிற்குள்ள வந்தவுடன் முதல் ஆளாக அந்த நாங்குநேரி மாணவரின் அருகில் தவெக தலைவரான விஜய் அமர்ந்து கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும், அதை தொடர்ந்து அங்கு வருகை தந்த அனைத்து இடத்தில் இருந்த மாணவர்களின் மத்தியில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
சென்னை : ஹாலிவுட்டில் தி பிரைம் ஆப் மிஸ் ஜீன் பிராடி', 'ஹாரி பாட்டர்', உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம்…
மும்பை : இந்திய அணியில் இடம்பெற்று விளையாடி வரும் சர்பராஸ் கான் சகோதரரும், மகாராஷ்டிரவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரருமான…
சென்னை : லப்பர் பந்து திரைப்படம் வசூலில் பனைமர உயரத்துக்கு சிக்ஸர் விளாசி வருவதுபோல, விமர்சன ரீதியாகவும் பல பிரபலங்களிடம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அளிக்கப்படும் பிரசாதமான லட்டு குறித்த சர்ச்சை நாடு எங்கிலும் பேசும் பொருளாகவே அமைந்துள்ளது.…
சென்னை : கடந்த இரு தினங்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பொழிந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, சென்னையின் புறநகர்ப்…
சென்னை : நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த் சுவாமி நடித்த 'மெய்யழகன்' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி, திரை விமர்சகர்கள்…