விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் வரலாற்று படத்திலிருந்து விலக வேண்டும் – சீமான்!

Published by
Rebekal

விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் வரலாற்று படத்திலிருந்து விலக வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். 

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அவர்களின் வாழ்க்கை வரலாறு படத்தில் தற்போது விஜய் சேதுபதி அவர்கள் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் முரளிதரன் சிங்களவர்களுக்கு சாதகமாவர் எனவும் திட்டமிட்ட அரசின் இனப்படுகொலையை அவர் நியாயப்படுத்திக் கூறிய ஒருவர் என்பதாலும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்திற்கு பல்வேறு அரசியல் அமைப்புத் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படத்தில் தம்பி விஜய் சேதுபதி நடிப்பது அவரது திரையுலக வாழ்க்கைக்கு நல்லதல்ல; எனவே உடனடியாக அப்படத்தில் இருந்து விலகும் முடிவை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் முத்தையா முரளிதரன் பற்றி தம்பிக்கு நாம் சொல்லத் தேவை இருக்காது அவரே புரிந்து கொண்டு படத்தில் இருந்து விலகுவார் என தான் நான் அமைதி காத்தேன். ஆனால் படத்தினுடைய அடுத்த கட்ட பணிகள் தொடங்கியிருப்பதால் தம்பிக்கு அன்போடு அறிவுறுத்துகிறேன், முத்தையா ஒரு விளையாட்டு வீரன் மட்டுமல்லாமல் உலகளாவிய புகழ் வெளிச்சத்தை கொண்டு சிங்கள அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையும், இன ஒதுக்கல் கொள்கையையும் நியாயப்படுத்தி பேசியவர். தமிழர் என்ற இன அடையாளத்தை பயன்படுத்தும் சிங்களப் பேரினவாதத்தின் கைக்கூலியாக இருந்து வருபவர், 2 லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு,  பிணக் காடாய் மாறி ரத்த சகதியில் எம் உறவுகளின் உடல்களும் மரண ஓலங்களும் கேட்ட நொடிப்பொழுதில் எவ்வித தயக்கமும், குற்றமும் இன்றி இனவழிப்பு செய்யப்பட்ட நாளை மகிழ்ச்சிகரமான நாளாக கருதுகிறேன் என அறிவித்தவர் முத்தையா. இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்சே நல்லாட்சி தருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதனால் இலங்கையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் முரளிதரன் உட்பட எவருமே தமிழகத்தில் விளையாடுவதற்கு முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் தடை விதித்திருந்தது தம்பி சேதுபதி அறியாததா? அதுவெல்லாம் தெரிந்திருந்தும், முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படத்தில் நடிக்க முன் வந்ததை எப்படி நம்மால் ஏற்க முடியும்? அது வரும் காலங்களில் விஜய் சேதுபதியின் மற்ற படங்கள் வெளியிடுவதில் சிக்கலை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார். எனவே தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து படத்தில் இருந்து முற்றிலுமாக விலகுகிறேன் எனும் அறிவிப்பை விஜய் சேதுபதி வெளியிட வேண்டும் என அன்போடு அறிவுறுத்துகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…

16 mins ago

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…

25 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

2 hours ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

3 hours ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

3 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

3 hours ago