சேகுவேரா நினைவு தினம்: “அடையாள அரசியலில் சிக்கிக் கொள்ளாதவன்”-விசிக தலைவர் திருமாவளவன் அஞ்சலி..!

Published by
Edison

புரட்சியாளர் சேகுவேராவின் 54 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அஞ்சலி தெரிவித்துள்ளார்.

அர்ஜெண்டைனாவில் பிறந்தவரும்,மார்க்சிஸ்ட் புரட்சியாளர், மருத்துவர், எழுத்தாளர்,கொரில்லா தலைவர், இராஜதந்திரி மற்றும் இராணுவ கோட்பாட்டாளர் மற்றும் உலகம் முழுவதும் கலாச்சார அடையாளமாகவும் மாறிய சேகுவேரா, கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து கியூபா விடுதலைக்காகப் போராடினார். விடுதலைக்கு பின்னர், கியூப நாட்டின் வெளியுறவு அமைச்சராகவும் இருந்தவர்.

அதன்பின்னர் பொலிவியா நாட்டில் சமூக மாற்றத்தை கொண்டு வருவதற்காக தன் நாட்டையும் வகித்த பதவியையும் தூக்கி எறிந்துவிட்டு பொலிவியா சென்றார்.இதனையடுத்து,புரட்சியாளர் சேகுவேரா, 1967ஆம் ஆண்டு, அக்டோபர் 8 ஆம் தேதி, பிடிக்கப்பட்டு,அடுத்த நாள்(அக்.9 ஆம் தேதி) பொலிவிய அரசு படையால், சுட்டுக்கொல்லப்பட்டார்.இதனைத்தொடர்ந்து,ஒவ்வொரு ஆண்டும் அக்.9 ஆம் தேதி அவரது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,இன்று அவரது 54 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும்,எம்பியுமான திருமாவளவன் அவர்கள்,சேகுவேரா அடையாள அரசியலில் சிக்கிக் கொள்ளாதவன் என கூறியுள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“சேகுவேரா:அடையாள அரசியலில் சிக்கிக் கொள்ளாதவன். மொழி இனம் தேசம் போன்ற வரம்புகளைத் தாண்டி வல்லாரை எதிர்த்த வல்லவன். ஏகாதிபத்தியத்தின் இடும்பெலும்பை முறித்தவன். உழைக்கும் மக்களால் நேசிக்கப்படும் புரட்சியாளன்”,என்று பதிவிட்டுள்ளார்.

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

9 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

9 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

10 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

10 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

10 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

10 hours ago