ஒரே நாளில் 10 நாட்களுக்கான வருகை பதிவுக்கு கையெழுத்திடும் வீடியோ..! – சென்னை ஸ்டான்லி மருத்துவமனை விளக்கம்

Published by
லீனா

வருகைப்பதிவேட்டில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என விசாரணை அறிக்கை தெரிவித்துள்ளது. 

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவி ஒருவர், ஒரே நாளில் 10 நாட்களுக்கான வருகை பதிவுக்கு கையெழுத்திடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதுகுறித்து விசாரிப்பதற்கு மருத்துவர்கள் அடங்கிய குழுவை அமைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் பாலாஜி உத்தரவிட்டு இருந்தது.

இந்த  நிலையில், இதுகுறித்து ஸ்டான்லி மருத்துவமனை வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையில், பேஸ்புக், டிவிட்டர் மற்றும் டிடி நெக்ஸ்ட் பேப்பர் ஆகியவற்றில் வெளியான வீடியோ க்ளிப் தொடர்பாக 02.05.2022 அன்று காலை 11.30 மணி அளவில் கல்லூரி க்வுண்சில் ஹாலில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை துணை முதல்வர் மற்றும் நிலைய மருத்துவ அதிகாரி தலைமையில் 8 துறைத்தலைவர்கள் அடங்கிய குழுவினரால் நடத்தப்பட்டது.

வீடியோ க்ளிப்பில் சம்மந்தப்பட்டவர் மரு.பி.சரஸ்வதி, மருந்தியல் முதலாமாண்டு மருத்துவ மாணவராக 29.03.2022 தேதியில் சேர்ந்துள்ளார். இவர் இத்துறையில் சேர்ந்ததில் இருந்து மருத்தியல் துறையில் பராமரிக்கப்படும் வருகைப்பதிவேட்டில் கையொப்பம் இட்டு வருகிறார். இப்பதிவேடு அத்துறைத்தலைவர் கட்டுப்பாட்டில் உள்ளது.

கல்லூரி அலுவலகத்தில் பராமரிக்கப்படும் வருகைப்பதிவேடு முதுநிலை கலந்தாய்வு இறுதிச்சுற்று முடிவடைந்த நிலையில் மாணவர்களின் கையொப்பதிற்காக திறக்கப்பட்டது. மேற்கண்ட மாணவி இந்தப்பதிவேட்டில் கையெழுத்திடும் போது மருத்துவமணை ஊழியர் ஒருவர் அவர் கையொப்பமிட்டதை வீடியோ பதிவு எடுப்பதை கவனிக்கவில்லை.

பேஸ்புக், டிவிட்டர் மற்றும் டிடி நெக்ஸ்ட் பேப்பர் ஆகியவற்றில் வெளியான வீடியோ க்ளிப்பினை பார்த்து கண்காணிப்பு கேமராவில் பதிவுகள் அனைத்தும் குழு உறுப்பினர்களால் கண்காணிக்கப்பட்டது. அவ்வீடியோ பதிவினை எடுத்தவர் இவ்வலுகத்தில் தடவியல் மருத்துவத்துறையில் அறிவியல் அதிகாரியாக பணிபுரியும் திரு.லோகநாதன் என்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மேற்கண்ட முதுநிலை மருத்துவ மாணவி தனக்கு பயமாக இருப்பதாகவும், மிகுந்த மனவுளைச்சல் தருவதாகவும் இவ்வலுவகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.இதன்மூலமாக வருகைப்பதிவேட்டில் அம்மாணவி மற்ற மருத்துவர்களுக்கோ தான் வராத நாட்களுக்கோ கையொப்பம் இடவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இறுதியாக இக்கல்லூரியில் வருகைப்பதிவேட்டில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்பதை குழு அறிக்கையின் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது

Recent Posts

”சேட்டன் வந்நல்லே… சேட்டை செய்ய வந்நல்லே” மீண்டும் கேப்டனாக களமிறங்கும் சஞ்சு சாம்சன்.!

பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…

3 minutes ago

“வக்பு சொத்துகளை மத்திய அரசு அபகரிக்க நினைக்கிறது!” ஆ.ராசா கடும் தாக்கு!

டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…

26 minutes ago

வக்பு வாரிய திருத்த சட்டம் : பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இன்று வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…

43 minutes ago

“டெல்லி நாடாளுமன்றமே வக்பு சொத்தா மாறியிருக்கும்” மத்திய அமைச்சர் பரபரப்பு பேச்சு!

டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…

1 hour ago

மும்பை அணியிலிருந்து விலகும் ஜெய்ஸ்வால்.! கோவா அணியில் கேப்டன் பதவி?

மும்பை: உள்ளூர் போட்டிகளில், அடுத்த சீசனில் இருந்து கோவா அணிக்கு விளையாட, மும்பை கிரிக்கெட் வாரியத்திடம் NOC சான்றிதழ் கேட்டிருக்கிறார்…

1 hour ago

கடலூரில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி விஜய் என்கவுண்டர்.!

கடலூர் : கடலூரில் போலீசை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற விஜய் என்ற வழிப்பறி கொள்ளையனை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.…

2 hours ago