வெற்றி வேல்.. வீர வேல்.. முழக்கத்துடன் உரையை தொடங்கிய அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

Published by
பாலா கலியமூர்த்தி

அதிமுக – பாஜக கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெரும் என்று பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இன்று தமிழகம் வந்துள்ள மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சேலத்தில் நடைபெற்று வரும் பாஜக இளைஞரணி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, வெற்றி வேல்.. வீர வேல்.. முழக்கத்துடன் உரையை தொடங்கிய அமைச்சர், சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்றும் பெரும்பான்மை பலத்துடன் பேரவைக்குள் நுழைய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

ஒவ்வொரு குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்படும். ஜல்ஜீவன் திட்டத்தில் 3 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு தரப்பட்டுள்ளது. நாட்டினை நிர்மாணிப்பதற்காக பாஜக அரசியல் நடத்துகிறது என்று கூறிய அவர், நான் தமிழில் அதிகம் பேச விரும்பினேன். ஆனால் தமிழில் பேச முடியாததற்கு மன்னிப்பு கேட்க விரும்புகிறேன், தமிழ் ஒரு அழகான மொழி என்றும் அனைத்து மொழிகளின் அம்மாவாக திகழும் தமிழை நான் வணங்குகிறேன் எனவும் குறிப்பிட்டார்.

மேலும், 1.3 கோடி இளைஞர்களை உள்ளடக்கிய 7.5 கோடி மக்களை கொண்ட தமிழகத்தை தலை வணங்குகிறேன். தொழில் முனைவோரின் ஆளுமைகளால் கட்டமைக்கப்பட்டு, வளமான கலாச்சாரம், மிகசிறந்த பாரம்பரியத்தை கொண்ட சேலம் நகரத்திலிருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன் என கூறியுள்ளார்.

கொரோனாவுக்கு பிறகு, இந்தியாவின் வளர்ச்சிக்கான அத்தியாயத்தை எழுத உள்ளோம். நாட்டில் அந்நிய முதலீடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பங்குச்சந்தை உச்சம்தொடுவது மட்டுமல்லாமல் ஜல்லிக்கட்டும் விளையாடுகிறது என தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

12 மாவட்டத்துக்கு கனமழை…அந்த 1 மாவட்டத்திற்கு மிக கனமழை…வானிலை மையம் அலர்ட்!

12 மாவட்டத்துக்கு கனமழை…அந்த 1 மாவட்டத்திற்கு மிக கனமழை…வானிலை மையம் அலர்ட்!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. …

13 minutes ago

ரிஷப் பண்ட் உங்க பாணியை மாத்தாதீங்க…ஜடேஜா முக்கிய அட்வைஸ்!

லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை…

45 minutes ago

கொரோனா கட்டுக்குள் இருக்கு…மக்கள் பயப்படவேண்டாம்! மத்திய அரசு விளக்கம்!

டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால்…

1 hour ago

LSG vs SRH : அதிரடி காட்டிய ஹைதராபாத்..,! பிளே ஆப்-பில் இருந்து வெளியேறிய லக்னோ.!

லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…

8 hours ago

“இந்தியாவில் கட்டுக்குள் கொரோனா பாதிப்பு” – மத்திய அரசு விளக்கம்.!

டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில்…

8 hours ago

LSG vs SRH : பேட்டிங்கில் மிரட்டிய லக்னோ.., ஹைதராபாத்துக்கு இமாலய இலக்கு.!

லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…

10 hours ago