சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு செய்தி கேட்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு ,திமுக, பாமக, கம்யூனிஸ்ட்கள், மதிமுக, காங்கிரஸ், விசிக சார்பாக ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.
இந்நிலையில், இந்த விசாரணையில், சென்னை உயர்நீதிமன்றம், மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீட்டில்ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தர சட்டம் இயற்றலாம்.மேலும் மத்திய கல்வி நிலையங்கள் அல்லாத நிலையங்களிலும் ஒபிசி இட ஒதுக்கீடு வழங்க சட்ட ரிதியாகவோ அரசியலமைப்பு ரீதியாகவோ எவ்வித தடையும் இல்லை.மேலும் இது தொடர்பாக 3 மாதத்தில் முடிவு எடுக்க வேண்டும். இட ஒதுக்கீடு வழங்க சட்டரீதியாக தடை இல்லை என்று தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்புக்கு அரசியல் கட்சி பிரபலங்கள் பலரும் வரவேற்றுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், அகில இந்திய மறுத்து தொகுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசு சட்டமியற்ற வலியுறுத்தியிருக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு செய்தி கேட்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன் என தெரிவித்துள்ளார்.
மேலும், இத்தீர்ப்பு வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்காக ஒருமித்து ஓங்கி ஒளித்திட்ட தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…