முதலில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுங்கள்! பிறகு மற்ற மொழியை கற்று கொள்ளலாம்….

Published by
Venu

குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு,  தாய்மொழிக்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், அதன்பிறகே, மற்ற மொழியை கற்று கொள்ளுமாறும் தெரிவித்திருக்கிறார்.

சென்னை கிண்டியிலுள்ள தனியார் விடுதியில், ஹிந்துஸ்தான் கல்விக் குழுமத்தின் 50ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெங்கையா நாயுடு உரையாற்றினார்.

அப்போது, வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி குறித்தெல்லாம் இளைய தலைமுறைக்கு தெரிவதில்லை என்றார். தாய் மொழியை ஒருபோதும் மறக்ககூடாது என்றும், குழந்தைகளுக்கு தாய்மொழியை கற்றுத்தர வேண்டும் என்றும் அவர் கூறினார். மம்மி, டாடி, என்ற கூறுவதை காட்டிலும், அம்மா, அப்பா என்று அழைக்கும் வகையில் குழந்தைகளை பெற்றோர் பழக்க வேண்டும் என்றார்.

தாய்மொழிக்கே முதலில் முக்கியத்துவம் கொடுக்குமாறும், பிறகு மற்ற மொழியை கற்று கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார். தூய்மை இந்தியா திட்டம் பிரதமர் மோடிக்கானது மட்டுமல்ல என்றும், அனைத்து மக்களுக்குமானது என்றும், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு குறிப்பிட்டார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

8 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

13 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

13 hours ago