அமமுக ஒன்னும் அவர் வீட்டுவாசல காத்துக்கிடக்கல..விட்டு விளாசிய வெற்றிவேல்

Published by
kavitha

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் கூட்டுச் சேர்ந்தால் அவப்பெயர் ஏற்படும் என ரஜினிகாந்த் கருதுவதாக தமிழருவி மணியன் அளித்த பேட்டிக்கு அமமுக சேர்ந்த வெற்றிவேல் காரசாரமாக பதில் அளித்துள்ளார்.

ரஜினி அரசியல் குறித்து அறிவித்து ஒருவருடம் கழிந்த நிலையில் அதற்கான பணிகளில் நடைபெறுகிறதா.? என்று பலதரப்பில் இருந்து கேள்வி எழுப்பட்டது.மேலும் ரஜினி எப்பொழுது கட்சி துவங்க உள்ளார் என்றெல்லாம் அரசியல் மற்றும் அவருடைய ரசிகர்கள் உட்பட அனைவரும்  கேள்வி எழுப்பி வந்த நிலையில் ரஜினியின் அரசியல் குறித்து தெரிவித்து வரும் அவருடைய ஆலோசகராக கருதப்படும் தமிழருவி மணியன் அன்மையில் இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார்.

Image result for ரஜினி

அதில் ரஜினியின் அரசியல் பற்றி விரிவாக கூறியுள்ளார் அதில் வரும் ஏப்ரல் மாதம் ரஜினி கட்சியைத் தொடங்குகிறார், ஆகஸ்ட் மாதத்தில் பிரமாண்ட மாநாடு நடத்த திட்டமிட்டு பட்டுள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில்  தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ரஜினி இருப்பதாகவும் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் யாரோடு கூட்டணி கொள்வார் என்ற தகவலையும் தெரிவித்துள்ளார். 2014 ஆண்டு எவ்வாறு பாமக, தேமுதிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளை தேசிய ஜனநாயக கூட்டணிக்காக இணைத்தது போன்ற ஒரு வானவில் கூட்டணி ரஜினிக்காக உருவாக்கப்படும். பாஜகவுடன் ரஜினிகாந்த் கூட்டணி அமைப்பாரா? இல்லையா என்பது பற்றி  ரஜினியே முடிவெடுப்பார் அதே நேரத்தில் டிடிவி தினகரனுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்ற முடிவில் ரஜினிகாந்த் உறுதியாக இருக்கிறார் என்று அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

இந்நிலையில் அவருடைய இந்த பேட்டித் தொடர்பாக அமமுக செய்தி தொடர்பாளர் வெற்றிவேல் செய்திநிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ரஜினியின் அரசியல் குறித்து பேச தமிழருவி மணியனுக்கு என்ன அங்கீகாரம் உள்ளது.இவர் என்ன  ரஜினியின் செய்தி தொடர்பாளரா ? அவர் அமைக்கும் கூட்டணி தான் அமோக வெற்றி பெறபோகிறது என்று மொட்டையாக பேசி வருகிறார் அதைப்பறி பேசக் கூடாது.

ரஜினி கட்சி ஆரம்பிப்பது குறித்து  மட்டும் தான் அவர் பேச வேண்டும்.காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவரா? அல்லது காந்திக்கு இவர் என்ன பேரனா? தமிழருவி மணியன் நல்லவராக இருக்கலாம் ஆனால்  அதற்காக  எதுக்கெடுத்தாலும் கருத்து சொல்லக்கூடாது.ரஜினி கட்சி ஆரம்பித்தால் டிடிவி தினகரனுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை என்று இவர் எவ்வாறு  கூறலாம்? ரஜினியோடு  கூட்டணி வைக்க  அவர் வீட்டு வாசலில் நாங்கள் ஒன்னும்   காத்திருக்கவில்லை. கூட்டணி குறித்து ரஜினி தான்  முடிவு செய்ய வேண்டும். அல்லது அமமுக தலைமை  தான் முடிவு செய்யவேண்டும். இதற்கிடையில் இடைத்தரகர் தமிழருவிமணியன் பேசக்கூடாது என்று காட்டமாக தெரிவித்தார்.

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

5 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

5 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

5 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

5 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

5 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

6 hours ago