முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வழக்கில் இன்று தீர்ப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வழக்கில் இன்று தீர்ப்பு வரஉள்ள நிலையில், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு.

தன் மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்யக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. அதன்படி, முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. எஸ்பி வேலுமணி மீது டெண்டர் முறைகேடு மற்றும் சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியின்போது சென்னை, கோவை மாநகராட்சி பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு செய்ததாக வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. சென்னை, கோவை மாநகராட்சி பணிகள் தொடர்பாக ரூ.800 கோடி அளவுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு என வழக்கு பதிவு செய்யப்பட்டன. இதுபோன்று எஸ்பி வேலுமணி அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேலுமணி ஆதரவாளர்களுக்கு டெண்டர் வழங்க விதிகள் மாற்றி அமைக்கப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றசாட்டை முன் வைத்துள்ளது. எனவே, டெண்டர் கோரியதில் முறைகேடுகள் செய்ததாகவும், வருமானத்திற்கு அதிகமாக 58 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்ததாகவும் வேலுமணி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை ஹைகோர்ட்டில் வேலுமணி வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த நிலையில், தன் மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்யக்கோரி எஸ்பி வேலுமணி தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நீதிபதிகள் பிஎன் பிரகாஷ், ஆர்எம் டீக்காராமன் அமர்வு தீர்ப்பு வழங்குகிறது. வேலுமணியின் வழக்கில் இன்று தீர்ப்பு வரஉள்ள நிலையில், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

3 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

4 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

5 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

5 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

5 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

5 hours ago