வேங்கைவயல் விவகாரம் – 8 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய உத்தரவு!

DNA test

டிஎன்ஏ பரிசோதனைக்காக 8 பேரும் ரத்த மாதிரி வழங்க புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவு.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் தொடர்பாக 8 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, வேங்கைவயல் விவகாரத்தில் DNA பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்த 8 பேருக்கும், புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நாளை DNA பரிசோதனை செய்ய ஆணையிடப்பட்டுள்ளது. வேங்கைவயலை சேர்ந்த 8 பேரும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜரான நிலையில், நாளை டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள நீதிபதி ஜெயந்தி அறிவுறுத்தியுள்ளார்.

குற்றவாளிகளை கண்டறிய டிஎன்ஏ பரிசோதனை நடத்த வேண்டும் என்று சிபிசிஐடி சம்மன் அனுப்பிய நிலையில், 8 பேரும் அதனை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்