வேங்கைவயல் விவகாரம் : சிபிசிஐடி மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்..!

Published by
அகில் R

கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி அன்று, புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கபட்டது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

வடசென்னை.! உங்கள் தொகுதி.. உங்கள் பார்வைக்கு….!

இந்த வழக்கை விசாரிக்க காவல்துறையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது. அதன் பின்னர் 2023 ஆண்டு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு வழக்கு மாற்றப்பட்டது. இதுவரை மொத்தமாக 147 பேரிடம் விசாரணை செய்தும், பல்வேறு நபர்களிடம் டிஎன்ஏ மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 394 நாட்களாக நாடத்தப்பட்டு வந்த இந்த் விசாரணையில் இதுவரை யாரும் கைது செய்யபடவில்லை. இதனால் ஒரு கட்டத்திற்குமேல் விசாரணையை மாற்ற வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி. கோரிக்கை வைத்தனர். இதை தொடர்ந்து பலருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டது. உண்மை குற்றவாளிகளை அப்பொழுதும் புடிக்க முடியாமால் இருந்துது.

இறுதியாக சிபிசிஐடி போலீசார் உண்மைக் கண்டறியும் பரிசோதனையை நடத்த திட்டமிட்டனர். அதற்கு அனுமதி பெற புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில் முதலில் ஒரு 10 பேரிடம் உண்மை கண்டறியும் பரிசோதனையை நடத்த திட்டமிட்டனர். அதற்கு அனுமதி கேட்கப்பட்டது .

இதை விசாரித்து வந்த விசாரணை அதிகாரி திருச்சி சிபிசிஐடி   டி.எஸ்.பி. பால்பாண்டி தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய அதிகாரியாக தஞ்சாவூர் சிபிசிஐடி  டி.எஸ்.பி. கல்பனா தத் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தனது உத்தரவில் டி.ஜி.பி. தெரிவித்துள்ளார்.

ஆனால்,  அந்த 10 பேர் தரப்பினர்களும்  எதிர்ப்பு தெரிவித்ததால். சிபிசிஐடி போலீசாரின் உண்மையைக் கண்டறியும் சோதனை தொடர்பான வழக்கை புதுக்கோட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்து வரும் இந்த வேங்கைவயல் விவகாரத்தில் இதுவரை  உண்மை குற்றவாளிகள் யார் என கண்டறிய முடியாமல் விசாரணை நீடித்து கொண்டே வருகிறது.

Recent Posts

அப்பா என் பாட்டு எப்படி இருக்கு.. மாரி செல்வராஜ்-க்கு டஃப் கொடுத்த அவரின் குட்டி வாண்டு.!

சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…

52 seconds ago

“அவருக்கு துளிகூட பயம் இல்லை” ! ரிஷப் பண்ட்டை புகழ்ந்த ஆடம் கில்கிறிஸ்ட்!

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…

21 mins ago

“அதிமுக மீண்டு வரவேண்டும்” உதயநிதி விருப்பம்.!

சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…

21 mins ago

3 நாள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி.!

டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…

34 mins ago

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…

1 hour ago

புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.600 உயர்வு.!

சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…

1 hour ago