வேலூரில் ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் சுவரில் துளையிட்டு கொள்ளை கும்பல் நகைகளை திருடி சென்றுள்ளது.
வேலூரில் நகரின் மையப்பகுதிக்கு அருகாமையில் தோட்டப்பாளையத்தில் அமைந்துள்ளது ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடை. இந்த கடை நேற்று இரவு 10 மணி வரை செயல்பட்டு பின்னர் கடை அடைக்கப்பட்டுஉள்ளது. இரவு காவலர்கள் மட்டும் இருந்துள்ள நிலையில்,
நள்ளிரவில், நகைக்கடையின் பின்புறம் சுவரில் துளையிட்டு கீழ் தளத்தில் உள்ள நகைகளை ஒரு கொள்ளை கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளது. காலையில் கடை ஊழியர்கள் கடையை திறந்த பின்னர்தான் இந்த கொள்ளை சம்பவம் தெரியவந்துள்ளது.
நகரின் மையப்பகுதியில் நடந்த இந்த துணிகர சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். நகைகள் எவ்வளவு கொள்ளைப்போனது என இன்னும் சரியாக தெரியவில்லை. அதற்கான கணக்கெடுப்புகள் நடைபெற்று வருகின்றன.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…