சென்னை, பள்ளிக்கரணை பிரதான சாலையின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர், சரிந்து சாலையில் வந்துகொண்டு இருந்த சுபஸ்ரீ பெண் பொறியாளர் மீது விழுந்தது. அதில் தடுமாறி அந்த பெண் கீழே விழுந்தபோது பின்னாடி வந்த தண்ணீர் லாரி மோதியதில் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதிகள், தமிழக அரசு அதிகாரிகளை தனது ஆக்ரோஷமான கேள்விகளால் துளைத்தெடுத்தார். இதனால் பேனர் கலாச்சாரத்திற்கு கடும் கட்டுப்பாடுகள் தற்போது விதிக்கப்பட்டு வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக வேலூர் ஆட்சியர் சண்முக சுந்தரம் அதிரடி உத்தரவை வெளியிட்டார். அந்த உத்தரவில், இனி சாலை இருபுறம், நடைமேடை, சாலை நடுவில், கல்வி மையங்கள், வழிபாட்டு தளங்கள் என எங்கும் எந்த ஒரு பதிவு செய்த அரசியல் கட்சிகளின் பேனர் இருக்கக்கூடாது எனவும், தற்காலிக விளம்பரங்கள் இனி 6 நாட்கள் மட்டுமே இருக்க வேண்டும். ஒவ்வோர் விளம்பரத்திற்கும் இடையே 10மீ இடைவெளி இருக்க வேண்டும். அதனை மீறுவோருக்கு 1 வருடம் சிறை மற்றும் 5 ஆயிரம் அபராதம் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பேனர் விவகாரத்தில் வேலூர் மாவட்டம் முன்மாதிரியாக இருக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும். பேனர் தொடர்பாக பொதுமக்களும் புகார் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
புதுச்சேரி : காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம் நாடுமுழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர், பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
சென்னை : இன்று அரசு ஊழியர்கள் மற்றும் காவலத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது.…
டெல்லி : இணையத்தில் அவ்வப்போது போலி செய்திகள் அந்தந்த சூழலுக்கு ஏற்ப பலரை நம்ப வைக்கும்படி போலி செய்திகள் உலா…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் - குஜராத் அணிகள் மோதுகின்றனர். ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெறும்…
சென்னை : நேற்றைய விடுமுறை தினத்தை தொடர்ந்து இன்று காலை அவை தொடங்கியதும், கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பது குறித்த சட்ட…