#Breaking:இனி ஆட்டோக்களில் இவை கட்டாயம்;மீறினால் பறிமுதல் – காவல்துறை எச்சரிக்கை!

Published by
Edison

வேலூர்:ஆட்டோக்களில் ஓட்டுநர் மற்றும் உரிமையாளரின் பெயர் விவரங்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என வேலூர் மாவட்ட ஏடிஎஸ்பி உத்தரவிட்டுள்ளார்.

வேலூரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆட்டோவில் சென்ற பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது.இதனையடுத்து,பாதிக்கப்பட்ட அப்பெண் மருத்துவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஒரு சிறார் உட்பட 5 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆலோசனைக் கூட்டம்:

இதனைத் தொடர்ந்து,வேலூர் டவுன் ஏடிஎஸ்பி சுந்தர மூர்த்தி அவர்கள் தலைமையில் இன்று ஆட்டோ ஓட்டுநர்களுடன் காவல்துறையினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதிரடி உத்தரவு:

இந்நிலையில்,இனி ஆட்டோக்களில் ஓட்டுநர் மற்றும் உரிமையாளரின் பெயர் விவரங்கள் கட்டாயம் இடம் பெற வேண்டும் என வேலூர் டவுன் ஏடிஎஸ்பி சுந்தர மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

இனி இவை கட்டாயம்:

அதன்படி,ஆட்டோக்களின் பின்புறம் ஓட்டுனரின் ஐடி நம்பர் ,உரிமையாளர் பெயர்,போன் நம்பர்,முகவரி ஆகியவை கட்டாயம் இடம் பெற வேண்டும் எனவும்,இக்கட்டுப்பாடுகளை மீறும் ஓட்டுநர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 

Recent Posts

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…

31 minutes ago

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…

1 hour ago

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

2 hours ago

அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி துரோகிதான்…அமைச்சர் ரகுபதி பதிலடி!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…

2 hours ago

“பாஜக மாநிலத் தலைவர் பணிகள் எனக்கு இருக்காது!” அண்ணாமலை மீண்டும் திட்டவட்டம்!

சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…

3 hours ago

வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு..!

சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…

3 hours ago