கொடியேற்றத்துடன் தொடங்கிய வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா!

Default Image

வேளாங்கண்ணி மாதா பேராலய கோவில் திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

உலகப்புகழ் பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலய கோவில் திருவிழா, ஆகஸ்ட் 29- ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 8- ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆனால் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது.

இதன்காரணமாக, கொடியேற்றத்தில் பங்கேற்க மக்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், மக்கள் காணொளி மூலம் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மக்கள் பங்கேற்பின்றி திருப்பலி நடைபெற்றது. அதனைதொடர்ந்து, தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்ப்ரோஸ் அவர்களால் கொடியேற்றி, தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியை மக்கள் காணொளி மூலம் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்