பக்தர்கள் இன்றி நடைபெற்ற வேளாங்கண்ணி பேராலய தேர்பவனி!

Published by
Rebekal

நாகையில் பக்தர்கள் இன்றி நடைபெற்ற வேளாங்கண்ணி பேராலய தேர்பவனி.

நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி பேராலயத்தில், வருடம் தோறும் 10 நாட்கள் திருவிழா அட்டகாசமாக நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக இந்த வருடம் பக்தர்கள் இன்றி மிகவும் சாதாரணமான நிலையில் திருவிழா நடத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி பக்தர்கள் இன்றி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்ட இந்த திருவிழாவில், பக்தர்கள் வருவதை தடுப்பதற்காக 8 வழிகளும் ஆலயத்தை சுற்றி அடைக்கப்பட்ட நிலையிலேயே கடந்த ஒன்பது நாட்களும் இருந்துள்ளது. இந்நிலையில் உள்ளூர் பக்தர்களுக்கு காலை 8 மணி முதல் 5.30 மணி வரை வழிபாடு நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது.

இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இறுதி நிகழ்ச்சி தேர்பவனி நேற்று நடைபெற்றுள்ளது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பேராலயம் முன்பு, புனித மிக்கேல், சூசையப்பர், அன்னை மாதா ஆகியோரின் பெரிய தேர்கள் பவனியாக சென்றுள்ளது. ஆலயத்தை சுற்றி தேர்பவனி நடந்தாலும் பேராலய அதிபர் பங்குத்தந்தை, திருச்சி மண்டல ஐஜி, நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்ட படி இந்த தேர் பவனி நடைபெற்றது. எப்பொழுதும் கோலாகலமாக இந்தியாவில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் உள்ளவர்களும் வந்து கலந்து கொள்ளக் கூடிய அளவு பிரமாண்டமாக நடக்க கூடிய இந்த திருவிழா இந்த வருடம் மக்கள் இன்றி கொடி ஏற்றப்பட்டு, தேர் பவனியும் நடைபெற்றுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

3 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

3 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

4 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

4 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

4 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

5 hours ago