சென்னையில் காய்கறிகளின் விலை இரண்டு மடங்காக உயர்வு !

சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்ட நிலையில் காய்கறிகளின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக வருகின்ற மே 17ம் தேதி ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. சென்னையில் கெரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளதால் கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது. இதனால் திருமழிசையில் தற்காலிக மார்க்கெட் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வியாபாரிகள் முன்கூட்டியே வாங்கி வைத்திருக்கும் காய்கறிகளை அதிக விலையில் விற்பனை செய்து வருகின்றனர். இதனால், காய்கறிகளின் விலை இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளனர். இதில் 30ரூ விற்கப்பட்ட வெண்டைக்காய் தற்போது 60ரூக்கு விற்கின்றனர். அதேப்போல் 60ரூ விற்கப்பட்ட அவரைக்காய் 100ரூக்கும், 40ரூ விற்கப்பட்ட பச்சை மிளகாய் 100ரூக்கு விற்று வருகின்றனர்.