சென்னை:கடந்தாண்டு கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற சீன தாக்குதலில் உயிரிழந்த இராணுவ வீரர் பழனி அவர்களுக்கு வீர் சக்ரா விருது அளித்திருப்பது பெருமைக்குரியது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனி, கடந்தாண்டு கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற சீன தாக்குதலில் உயிரிழந்தார். இதனையடுத்து,அவருக்கு வீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று ஹவில்தார் பழனி சார்பில் அவரது மனைவியிடம், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மகாவீர் சக்ரா விருதை வழங்கினார்.
உயிரிழந்த இராணுவ வீரர் பழனி அவர்களுக்கு வீர் சக்ரா விருது அளித்திருப்பது பெருமைக்குரியது என்றும்,அவரது வீரம் நாட்டுபற்றறின் அடையாளம் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“வரலாற்றில் நிறைந்து வாழும் இராணுவ வீரர் பழனி அவர்களுக்கு வீர் சக்ரா விருது அளித்திருப்பது பெருமைக்குரியது. கல்வான் பள்ளத்தாக்கில் அவர் காட்டிய தீரம் தமிழர்களது நாட்டுப்பற்றின் அடையாளம்”,என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…