வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் – சுற்றளவைக் குறைக்கும் முடிவு வாபஸ்!

Published by
பாலா கலியமூர்த்தி

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் சுற்றளவைக் குறைக்கும் முடிவை திரும்பப் பெறுகிறது தமிழ்நாடு அரசு.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் சுற்றளவை குறைக்கும் முடிவை திரும்பப் பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின் போது தேசிய வன உயிர் வாரியத்திடம் வழங்கப்பட்ட விண்ணப்பத்தை திரும்ப பெறப்படுவதாக தலைமை காட்டுயிர் பாதுகாவலர் நீரஜ், துறையின் முதன்மை செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். சரணாலயத்தின் சுற்றளவை 5 கி.மீல் இருந்து 3 கி.மீ-ஆக குறைக்க முடிவு செய்யப்பட்ட நிலையில் வாபஸ் பெறப்பட்டது.

கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி தேசிய வனஉயிர் வாரியத்திடம் தமிழ்நாடு அரசு விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்தது. அதில், கட்டுமானங்களை கட்ட முடியாத காரணத்தால் உள்ளூர் மக்களை பறவைகள் சரணாலய பாதுகாப்பு மற்றும் மேலாண்மை பணியில் ஈடுபடுத்த முடியவில்லை.

ஏரியைச்சுற்றி முதல் 3 கிலோமீட்டர் சுற்றளவில் மட்டுமே தற்போது விவசாயம் நடப்பதாகவும் 3 முதல் 5 கிலோமீட்டர் சுற்றளவில் விவசாயம் கைவிடப்பட்டதால் பறவைகள் வருவதில்லை எனவும், அப்பகுதியில் கட்டுமானங்கள் எழுப்பும்போதும், நிலப்பயன்பாட்டை மாற்றும்போதும் கிராம மக்களுக்கும் வனத்துறையினருக்குமிடையே பிரச்னைகள் எழுகிறது.

இதனைத் தடுக்க வேடந்தாங்கல் சரணாலயத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியை 5 கி.மீ சுற்றளவிலிருந்து 3 கி.மீ சுற்றளவிற்கு குறைக்க வேண்டும் என அதில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இத்தகைய முன்மொழிவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும், எனவே சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் வாழ்விட சூழலியல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சுற்றளவை குறைக்கும் முடிவை வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

15 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

15 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

15 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

16 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

16 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

16 hours ago