1,000 டன் ஆக்ஸிஜன் தயாரிக்க இயலும் வேதாந்தா நிறுவனம்..!

Default Image

ஸ்டெர்லைட் ஆலையில் ஆயிரம் டன் மருத்துவ தேவைகளுக்கான ஆக்ஸிஜன் தயாரிக்க முடியும் என வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இன்று தூத்துக்குடியில் மூடப்பட்டு உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்து முதல்வர் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தேவையும் தற்போது அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக ஸ்டெர்லைட் ஆலையை 4 மாதங்களுக்கு மட்டும் திறக்க அனுமதிக்கலாம் பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதனால், ஸ்டெர்லைட் ஆலை 4 மாதங்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆயிரம் டன் மருத்துவ தேவைகளுக்கான ஆக்ஸிஜன் தயாரிக்க இயலும் என்றும் தமிழகம் பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜனை விநியோகம் செய்வது குறித்து நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்துவதாக வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்