நான் கூறிய கருத்து விஜய்க்கு எதிரானது அல்ல.! விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம்.!

Published by
மணிகண்டன்

நடிகர் விஜயை மனதில் வைத்து நான் கருத்து கூறவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். 

நடிகர் விஜய் அண்மையில் தமிழகத்தில் ஓவ்வொரு தொகுதியிலும் 12ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுத்தொகை , நினைவு பரிசு உள்ளிட்டவை வழங்கினார். அந்த சமயம் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில் சினிமாத்துறைனர் அரசியலுக்கு வருவது தமிழக அரசியலின் சாபக்கேடு என கடுமையாக விமர்சித்து இருந்தார். அந்த சமயம் இது விஜய்க்கு எதிராக பகிரப்பட்ட கருத்து என அரசியல் வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டது.

தற்போது இந்த விவகாரம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் தனது விளக்கத்தை அளித்துள்ளார்.  இன்று அவர் செய்தியாளர்கள் மத்தியில் கூறுகையில், நான் யாரையும் காழ்ப்புணர்வோடு விமர்சிக்கவில்லை. ரஜினி அரசியலுக்கு வருவதை நான் வரவேற்றேன். அதே போல விஜய் அரசியலுக்கு வருவதையும் வரவேற்றேன். தமிழகத்தில் ஓர் உளவியல் கட்டமைப்பு உள்ளது. சினிமா பாடல்களில் கூடா அது கூறப்பட்டுள்ளது. அதாவது தமிழர்கள் தங்கள் தலைவர்களை திரையரங்குகளில் தேடுகிறார்கள் என்று கூறப்படுவதுண்டு என கூறினார்.

அதே போல தமிழக அரசியல் நீண்ட காலமாக சினிமாவை சார்ந்தததாக இருந்தது. திரை பிரபலங்களை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்யப்படுகிறது. தமிழகத்தை தவிர எந்த சூப்பர் ஸ்டாரும் கடைசி காலத்தில் ரசிகர் பலத்தை வைத்து கொண்டு அரசியலில் இறங்கியது இல்லை. அப்படி அரசியலில் பெரிய நடிகர்கள் இறங்கும் போது அவர்கள் அரசியல் களத்தில் போராட தேவையில்லை. சினிமா பாப்புலர் போதும். சிறை செல்ல தேவையில்லை. அரசியலில் அடியெடுத்து வைத்ததும் முதல்வர் ஆகிவிடலாம் என எண்ணுகிறார்கள். இதனை தான் எதிர்க்கிறேன் எனவும் தனது கருத்தை முன்னிறுத்தினார்.

மேலும், தற்போதும், பொதுவாழ்வில் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு போன்றோர் இன்னும் இருக்கிறார்கள். 98 வயதிலும் மேடை ஏறுகிறார். அவர் தொடாத போராட்டம் இல்லை. விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டவர் எனவும் திருமாவளவன் தெரிவித்தார்.

மேலும், தமிழக மக்களுக்கு இது போல இருக்கும் இந்த உளவியலை எதிர்த்து தான் நான் விமர்சனம் செய்கிறேன். சினிமாவில் மார்க்கெட் உள்ளவரை பொருள் ஈட்டிகொண்டு, புகழ் பெற்றுக்கொண்டு அதன் பிறகு அரசியலுக்கு வருவதும் ஒருவகை சுரண்டல் தான். அந்த உளவியலை தான் நான் அன்று சற்று ஆதங்கத்தோடு கூறினேன். அது நடிகர் விஜயை மனதில் வைத்து நான் கூறவில்லை என தனது விளக்கத்தை  திருமாவளவன் முன் வைத்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

9 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

9 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

9 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

10 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

10 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

10 hours ago