ஆர்.எஸ்.எஸ்-ஐயும் எங்களையும் ஒரே மாதிரியாக பாவிக்க முடியாது.! விசிக, இடதுசாரிகள் உயர்நீதிமன்றத்தில் மனு.!

Default Image

மத அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நடத்தும் பேரணியையும் எங்களையும் ஒப்பிட முடியாது. எனவே, மதநல்லிணக்க மனித சங்கிலி பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் – உயர்நீதிமன்றத்தில் விசிக, இடதுசாரிகள் மனு அளித்துள்ளனர். 

காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு , மதசார்பின்மையை வலியுறுத்தி சமய நல்லிணக்க மனிதசங்கிலி பேரணி நடத்த விடுதலை சிறுத்தைகள், இடதுசாரி கட்சிகளான மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் காட்சிகள் என மூன்று கட்சியினரும் ஒன்றாக காவல்துறையிடம் அனுமதி கேட்டு இருந்தனர் .

அண்மையில் பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டு இருபப்தாலும், அதே தேதியில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த இருப்பதாலும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என கூறி, மனிதசங்கிலி பேரணிக்கு கடந்த மாதம் 29ஆம் தேதி அனுமதி மறுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, ‘ மத அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நடத்தும் பேரணியையும் எங்களையும் ஒப்பிட முடியாது. எனவே, மதநல்லிணக்க மனித சங்கிலி பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள், இடதுசாரி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு கொடுத்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்